Skip to main content

Posts

யார் பெரியவன்?

  பறவைகளின் அரசன்                                                             Pic source: marksmith photography வீசுகின்ற பெருங்காற்றுக்கு உயிர் பிழைத்தால் போதும் என்ற அச்சத்தில் அனைத்து பறவைகளும் அடங்கி இருக்க, ஆஹா! புயல் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் மேலெழும்பி மேகக்கூட்டங்களுக்கு ஊடாக சென்று பறக்க துடிக்குமாம் கழுகு.   தனது குஞ்சுகளை குறிப்பிட்ட காலத்தில் மென்மையான கூட்டில் வைத்து பாதுகாத்த பின்னர், சிறிய முட்களைக் கொண்டு மாற்றியமைக்குமாம் தாய் பறவை. அந்த பிஞ்சு உடம்பில் முட்கள் தைக்கும் போது நிலை தடுமாறி கீழே விழும். அச்சமயம் இறக்கைகளை விரித்து பறக்க முயற்சி செய்யும். கீழே விழுந்து அடிபடப் போகும் குஞ்சுகளை ஆண் கழுகு சென்று தாங்கிப் பிடிக்கும்.  அதுமட்டுமல்லாமல் எதிரிகளிடமிருந்து தன்னையும், தன் முட்டைகளையும் பாதுகாக்க ஆபத்து காலத்தில் கந்தக அமிலத்தை உமிழ்ந்து மற்ற உயிரினங்களைக் கருகச...
Recent posts

நெற்றியடி

என்ன ஒரு ஆட்டம்    வானளாவிய கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் நட்சத்திரம் போல்  ஜொலிக்க, அலை கடலென திரண்டிருந்த மக்கள் கூட்டம் சோகத்துடன் இருக்கையில் அமர்ந்திருக்க, காற்று கூட அந்த இடத்திற்கு நுழையாமல் சற்று நேரம் காத்திருக்கலாம் என்று யோசித்திருந்த வேளையில், யாரோ ஒருவன் பற்றவைத்த நெருப்பில்  சட்டென்று பிடித்த காட்டுத்தீ போல, ஒவ்வொரு மனிதனின் வாயில் அவன் பெயர் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. போற்றுவார் போற்றட்டும் ! புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் ! என்பதற்கு இணங்க பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் மைதானத்திற்கு விளையாட வந்தார் எம். எஸ். தோனி. ஆம், அவர் வந்திருந்த நேரம் அணியானது தோல்வியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நேரம். அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல அவர்களால் கடைசியாக அனுப்பப்பட்ட ஆயுதம். கைபேசியில் notification  வருவது போல, அந்த score board  ஒவ்வொரு முறையும் எச்சரித்துக் கொண்டிருந்தது. 6 பந்துகளில் 23 ஓட்டங்கள். கடினமான இலக்கு. "எழில் , டிவி யை off பண்ணிட்டு படுக்க வா ! காலையில highlights பாத்துக்கோ" என...

பாத்திரம்

அழகிய பாத்திரம்  இரண்டு அணுகுண்டுகளை மார்பில் வாங்கிய குட்டித் தீவான ஜப்பான் நாட்டில் ஒரு வினோதமான பழக்கவழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வெகு நாட்களாகப்  பாதுகாத்து வந்த விலையுர்ந்த பொருட்களோ அல்லது மேசையோ அல்லது கிண்ணமோ திடிரென்று உடைந்தால் அதை தூக்கியெறியாமல், உடைக்கப்பட்ட இடங்களில் தங்க முலாம் பூசி அதனைப் புதுப்பிக்கின்றனர் என்ற தகவலை வளையொலி தேடலின் மூலமாக தெரிந்து கொண்டேன். இந்த காணொளியினை கண்ட பின் மனதில் ஆயிரம் கேள்விகள். இதே போன்ற சம்பவம் நம் வாழ்க்கையிலும் நடந்திருக்கும். ஏன்? நானே கண்ணாடிப்  பொருட்களை கையாளும் போது பலமுறை  உடைத்திருக்கிறேன். அந்த ஒரு விபத்து நடந்தால் இரண்டே வழிமுறைகளைச் செய்திருப்போம். ஒன்று, ஏதேனும் பசையைக் கொண்டு சரி செய்ய முயல்வோம் அல்லது குப்பைத் தொட்டிக்கு இடம் மாற்றி இருப்போம். இது எப்படி சாத்தியமாகும்?  என்று தேடல் பொறியின் மூலம்  இணையதளத்தில் தேடி பார்த்தேன்  Photo Source : Lakeside Pottery  ஒரு பொருள் சேதத்திற்கு உள்ளாக கடந்து சென்று மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு வரும்போது, கடந்த காலத்தில் ஏற்பட்ட வி...

பரம வைத்தியர்

  நோயாளியு‌ம் மருத்துவரும்  Pic courtesy: QuotesArea.com லியோ என்ற வாலிபன் உடல் நலம் சரியில்லை என்று மருத்துவரை பார்க்கச் சென்றான். அங்கு மருத்துவர்  நோயாளிகளை தத்தம் வியாதிகளுக்கு ஏற்ப சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தார். மருத்துவர் அவனை அணுகி " தங்களுக்கு என்ன பிரச்சனை" என்று வினவினார். அவன் அவருக்கு மறுமொழியாக " நான் என்ன வியாதி என்று கூற முடியாது. நீங்கள் ஒரு மருத்துவர் தானே? நீங்களே கண்டுபிடித்து சிகிச்சை அளியுங்கள்" என்றான். அதற்கு மருத்துவர் மிகவும் பொறுமையாக " நான் மருத்துவர் தான் ஆனால் நீங்கள் உடல் ரீதியான பிரச்சனை  என்ன என்று கூற விட்டால் என்னால் எப்படி குணப்படுத்த முடியும்" என்று கூறினார். மேலும் அவர் நோயின் தன்மை தெரியாமல் வைத்தியம் பார்ப்பது கூடாத காரியம். அது உங்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.   நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் கூட பாவம் என்ற கொடிய நோய் நீங்க வேண்டுமெனில், நம்முடைய இருதயத்தின் அறைகளை திறந்து பரம வைத்தியரான ஏசுவிடம் சென்று அறிக்கையிடும் போது மட்டுமே "ரட்சிப்பு" என்ற மருந்தை தந்த...