பறவைகளின் அரசன் Pic source: marksmith photography வீசுகின்ற பெருங்காற்றுக்கு உயிர் பிழைத்தால் போதும் என்ற அச்சத்தில் அனைத்து பறவைகளும் அடங்கி இருக்க, ஆஹா! புயல் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் மேலெழும்பி மேகக்கூட்டங்களுக்கு ஊடாக சென்று பறக்க துடிக்குமாம் கழுகு. தனது குஞ்சுகளை குறிப்பிட்ட காலத்தில் மென்மையான கூட்டில் வைத்து பாதுகாத்த பின்னர், சிறிய முட்களைக் கொண்டு மாற்றியமைக்குமாம் தாய் பறவை. அந்த பிஞ்சு உடம்பில் முட்கள் தைக்கும் போது நிலை தடுமாறி கீழே விழும். அச்சமயம் இறக்கைகளை விரித்து பறக்க முயற்சி செய்யும். கீழே விழுந்து அடிபடப் போகும் குஞ்சுகளை ஆண் கழுகு சென்று தாங்கிப் பிடிக்கும். அதுமட்டுமல்லாமல் எதிரிகளிடமிருந்து தன்னையும், தன் முட்டைகளையும் பாதுகாக்க ஆபத்து காலத்தில் கந்தக அமிலத்தை உமிழ்ந்து மற்ற உயிரினங்களைக் கருகச...
என்ன ஒரு ஆட்டம் வானளாவிய கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் நட்சத்திரம் போல் ஜொலிக்க, அலை கடலென திரண்டிருந்த மக்கள் கூட்டம் சோகத்துடன் இருக்கையில் அமர்ந்திருக்க, காற்று கூட அந்த இடத்திற்கு நுழையாமல் சற்று நேரம் காத்திருக்கலாம் என்று யோசித்திருந்த வேளையில், யாரோ ஒருவன் பற்றவைத்த நெருப்பில் சட்டென்று பிடித்த காட்டுத்தீ போல, ஒவ்வொரு மனிதனின் வாயில் அவன் பெயர் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. போற்றுவார் போற்றட்டும் ! புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் ! என்பதற்கு இணங்க பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் மைதானத்திற்கு விளையாட வந்தார் எம். எஸ். தோனி. ஆம், அவர் வந்திருந்த நேரம் அணியானது தோல்வியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நேரம். அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல அவர்களால் கடைசியாக அனுப்பப்பட்ட ஆயுதம். கைபேசியில் notification வருவது போல, அந்த score board ஒவ்வொரு முறையும் எச்சரித்துக் கொண்டிருந்தது. 6 பந்துகளில் 23 ஓட்டங்கள். கடினமான இலக்கு. "எழில் , டிவி யை off பண்ணிட்டு படுக்க வா ! காலையில highlights பாத்துக்கோ" என...