பறவைகளின் அரசன் Pic source: marksmith photography வீசுகின்ற பெருங்காற்றுக்கு உயிர் பிழைத்தால் போதும் என்ற அச்சத்தில் அனைத்து பறவைகளும் அடங்கி இருக்க, ஆஹா! புயல் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் மேலெழும்பி மேகக்கூட்டங்களுக்கு ஊடாக சென்று பறக்க துடிக்குமாம் கழுகு. தனது குஞ்சுகளை குறிப்பிட்ட காலத்தில் மென்மையான கூட்டில் வைத்து பாதுகாத்த பின்னர், சிறிய முட்களைக் கொண்டு மாற்றியமைக்குமாம் தாய் பறவை. அந்த பிஞ்சு உடம்பில் முட்கள் தைக்கும் போது நிலை தடுமாறி கீழே விழும். அச்சமயம் இறக்கைகளை விரித்து பறக்க முயற்சி செய்யும். கீழே விழுந்து அடிபடப் போகும் குஞ்சுகளை ஆண் கழுகு சென்று தாங்கிப் பிடிக்கும். அதுமட்டுமல்லாமல் எதிரிகளிடமிருந்து தன்னையும், தன் முட்டைகளையும் பாதுகாக்க ஆபத்து காலத்தில் கந்தக அமிலத்தை உமிழ்ந்து மற்ற உயிரினங்களைக் கருகச...